sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாயமாகி வரும் மழைநீர் கால்வாய் நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்

/

மாயமாகி வரும் மழைநீர் கால்வாய் நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்

மாயமாகி வரும் மழைநீர் கால்வாய் நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்

மாயமாகி வரும் மழைநீர் கால்வாய் நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்


ADDED : ஆக 31, 2025 11:55 PM

Google News

ADDED : ஆக 31, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி,:கொசஸ்தலை ஆற்றிற்கு மழைநீர் செல்லும் கால்வாய் முழுதும் செடிகள் வளர்ந்து, பராமரிப்பு இன்றி உள்ளது.

சோழவரம் அடுத்த செக்கஞ்சேரி, நெற்குன்றம், அட்டபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், அங்குள்ள கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு செல்கிறது. இந்த கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது.

கால்வாயின் கரைகள் சேதமடைந்தும், மரங்கள் வளர்ந்தும் உள்ளன. செக்கஞ்சேரி கிராமத்தில் கரைகள் கரைந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

கால்வாய் பராமரிப்பு இன்றி இருப்பதால், மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றிற்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மூன்று ஆண்டுகளாக இதே நிலை இருப்பதால், கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இது தொடர்பாக, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பருவமழைக்கு முன், கால்வாயை சீரமைக்க நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us