sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீணாகி வரும் புங்கத்துார் பூங்கா நகராட்சி நிர்வாகம் பாராமுகம்

/

வீணாகி வரும் புங்கத்துார் பூங்கா நகராட்சி நிர்வாகம் பாராமுகம்

வீணாகி வரும் புங்கத்துார் பூங்கா நகராட்சி நிர்வாகம் பாராமுகம்

வீணாகி வரும் புங்கத்துார் பூங்கா நகராட்சி நிர்வாகம் பாராமுகம்


ADDED : ஜூன் 16, 2025 11:23 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்துள்ள புங்கத்துார் பூங்காவை சீரமைக்க, குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட புங்கத்துார் லட்சுமிபுரம் அருகே, 2015ம் ஆண்டு 13.75 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா கட்டப்பட்டது. சில மாதம் வரை பூங்கா செயல்பட்டது. இங்கு, மின் இணைப்பு பெட்டி திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்ததால், அதே ஆண்டு, பூங்காவில் விளையாடிய சிறுவன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான்.

அதன்பின், பூங்கா நிரந்தரமாக மூடப்பட்டது. அவ்வப்போது, நகராட்சி நிர்வாகம் பூங்காவில் வளர்ந்துள்ள முட்செடிகளை மட்டும் அகற்றி வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூங்கா பராமரிப்பு பணியை, நகராட்சி நிர்வாகம் முற்றிலும் கைவிட்டது.

தற்போது, இந்த பூங்கா முழுதும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. நடைபாதை சேதமடைந்தும், விளையாட்டு உபகரணங்கள் முட்செடிக்குள் மறைந்து வீணாகி வருகிறது. இரவில், 'குடி'மையமாக மாறி விட்டது.

எனவே, நகராட்சி நிர்வாகம், புங்கத்துார் பூங்காவை சுத்தம் செய்து சிறுவர்கள் விளையாடவும், பெரியோர் நடைபயிற்சி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us