/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழாய்களில் வீணாகும் குடிநீர்; பேரூராட்சி நிர்வாகம் பாராமுகம்
/
குழாய்களில் வீணாகும் குடிநீர்; பேரூராட்சி நிர்வாகம் பாராமுகம்
குழாய்களில் வீணாகும் குடிநீர்; பேரூராட்சி நிர்வாகம் பாராமுகம்
குழாய்களில் வீணாகும் குடிநீர்; பேரூராட்சி நிர்வாகம் பாராமுகம்
ADDED : மார் 18, 2025 12:45 AM

ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில் 3,930 குடியிருப்புகள், 700க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.
இங்குள்ள 168 தெருக்களில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி வாசிகளின் குடிநீர் தேவைக்காக, ஆரணி ஆற்றில் போடப்பட்ட ஆழ்துளை கிணறு வாயிலாக, ஐந்து மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.
அதன்பின், குழாய்கள் வாயிலாக குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு தெருக்களிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 96 பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, இந்த குழாய்கள் பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.