sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சோழவரத்தில் சிக்கிய கஞ்சா கேரளாவுக்கு கடத்தியவர் கைது

/

சோழவரத்தில் சிக்கிய கஞ்சா கேரளாவுக்கு கடத்தியவர் கைது

சோழவரத்தில் சிக்கிய கஞ்சா கேரளாவுக்கு கடத்தியவர் கைது

சோழவரத்தில் சிக்கிய கஞ்சா கேரளாவுக்கு கடத்தியவர் கைது


ADDED : நவ 02, 2024 06:32 PM

Google News

ADDED : நவ 02, 2024 06:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில், செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மதியம், சோழவரம் டோல்கேட் பகுதியில் இன்ஸ்பெக்டர் மலர்செல்வி தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஜெயேஷ், 40, என்பதும் வேலைக்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்று வருவதும் தெரிந்தது.

அவரது உடமைகளை சோதனை செய்தபோது, அதில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

இவை ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்ல இருந்தது விசாரணையில் தெரிந்தது. அதையடுத்து ஜெயேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்த, கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us