sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இருதரப்பினர் மோதல் போலீசார் குவிப்பு

/

இருதரப்பினர் மோதல் போலீசார் குவிப்பு

இருதரப்பினர் மோதல் போலீசார் குவிப்பு

இருதரப்பினர் மோதல் போலீசார் குவிப்பு


ADDED : பிப் 17, 2024 12:40 AM

Google News

ADDED : பிப் 17, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில், நேற்று முன்தினம் பள்ளி மாணவியை, சிறுவர்கள் கிண்டல் செய்த விவகாரம் இரு பிரிவினர் இடையே மோதலாக மாறியது.

பள்ளி மாணவியர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து மூவரை கைது செய்தனர்.

சிறுவர்கள் தரப்பினர் அளித்த புகார் மீது வழக்கு பதிந்த போலீசார், கைது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நேற்று, பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில், சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி தலைமையிலான போலீசார், சமாதானம் பேசினர். பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால், நாள் முழுதும் பதற்றமான சூழல் நிலவியது. இரு தரப்பினரும் பேச்சு நடத்தி தீர்வு காண்பதாக, நேற்று மாலை உறுதி அளித்தனர்.

இருப்பினும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, சாலையில் தடுப்பு அமைத்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us