/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : பிப் 15, 2024 08:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் வரை புறநகர் ரயில் இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் வந்தபோது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.