ADDED : ஜன 13, 2024 09:41 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு:பூண்டி ஒன்றியம் தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 51. இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்துக்குமாரின் அண்ணன் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
