ADDED : ஏப் 04, 2025 02:47 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, ராவணேஸ்வர வாகனத்தில், தீர்த்தீஸ்வரர் வீதி உலா வந்தார்.
திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பிரம்மோத்சவ விழா, கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 12 நாட்களாக, உற்சவர் தீர்த்தீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.
கடந்த, 30ம் தேதி ரத உற்சவம், மறுநாள் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், நடராஜர் அபிஷேகம், விமானம், தீர்த்தவாரி நடந்தது. இரவு ராவணேஸ்வர வாகனத்தில் தீர்த்தீஸ்வரர் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். நிறைவு நாளான நேற்று, தொட்டி உற்சவம், பந்தம்பரி நடந்தது.

