/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
/
ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
ADDED : பிப் 18, 2025 09:25 PM
மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், மேல்நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 38; இவர், வெங்கத்துார் பகுதியில், அலங்கார பொருட்கள் தயாரிக்கும் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி, கடைக்கு வந்த போது, முன்புற பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்த போது, அறையில் வைத்திருந்த 4 கிரைண்டிங் மிஷன், 2 வெல்டிங் மோட்டார், கட்டிங் மிஷன், வெல்டிங் ராடு, 100 மீட்டர் காப்பர் ஒயர் ஆகியவை திருடபட்டது தெரிந்தது.
இதுகுறித்து, பார்த்திபன், மணவாள நகர் போலீசில், நேற்றுமுன்தினம், கடையின் பூட்டை உடைத்து, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலங்கார பொருட்கள் திருடு போனதாக புகார் அளித்தார். அதன்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

