/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூட்டிய வீட்டில் ரூ.20,000 திருட்டு
/
பூட்டிய வீட்டில் ரூ.20,000 திருட்டு
ADDED : பிப் 13, 2024 06:43 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் காக்களூர் அடுத்த ஆஞ்சநேயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின்மணி, 55. சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 29ம் தேதி காலை 7:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். பின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தன் தோழியுடன் தங்கியுள்ளார். கடந்த 10ம் தேதி மாலை காக்களூர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து ஜோஸ்பின்மணி கொடுத்த புகார்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.