/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருக்கச்சி நம்பிகள் மங்களாசாசன வைபவம் பூந்தமல்லியில் மூன்று கருட வாகன உத்சவம்
/
திருக்கச்சி நம்பிகள் மங்களாசாசன வைபவம் பூந்தமல்லியில் மூன்று கருட வாகன உத்சவம்
திருக்கச்சி நம்பிகள் மங்களாசாசன வைபவம் பூந்தமல்லியில் மூன்று கருட வாகன உத்சவம்
திருக்கச்சி நம்பிகள் மங்களாசாசன வைபவம் பூந்தமல்லியில் மூன்று கருட வாகன உத்சவம்
ADDED : ஏப் 06, 2025 11:28 PM

பூந்தமல்லி:பூந்தமல்லியில் வைணவ மகான் திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமாக வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, திருக்கச்சி நம்பிகளின் மங்களாசாசன வைபவம், நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு, திருக்கச்சி நம்பிகள் வாகன மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
இதையடுத்து, ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீவரதராஜர், ஸ்ரீசீனிவாசர் ஆகிய மூன்று பெருமாள்களும், மூன்று கருட வாகனத்தில் எழுந்தருளினர்.
திருப்பாவை சாற்று முறை நடந்தப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டு, தீர்த்த பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கோபுர வாசலுக்கு மூன்று பெருமாள்களும் தனித்தனியே எழுந்தருளி, திருக்கச்சி நம்பிக்கு காட்சி அளித்தனர். இதை தொடர்ந்து, மூன்று கருட வாகன வீதி உலா நடந்தது.
பிரதான திவ்ய தேசமான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் ஆகிய பெருமாள்களின் மூன்று கருட சேவையை ஒன்றாக பார்க்கும் நிகழ்வு, வேறு எங்கும் நிகழாது.
இந்த மூன்று கருட சேவையை சேவித்தால், 108 திவ்ய தேசங்களுக்கும் சென்று வழிபட்ட பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகத்தால், நேற்று நடந்த கருட சேவை உத்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
இதை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

