/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி உண்டியல் வசூல் ரூ.65 லட்சம்
/
திருத்தணி உண்டியல் வசூல் ரூ.65 லட்சம்
ADDED : ஜூலை 31, 2025 01:17 AM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள், ஏழு நாட்களில், 65 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
மேலும், கடந்த, 28ம் தேதி முருகன் கோவிலில் நடந்த ஆடிப் பூரம் திருவிழாவிற்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து தரிசனம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் ரொக்கம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை உண்டியலில் செலுத்தினர்.
அந்த வகையில், கடந்த, 7 நாட்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் உண்டியல் திறந்து எண்ணினர்.
இதில், 64 லட்சத்து, 89,520 ரூபாய் ரொக்கம், 112 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி ஆகியவை இருந்தன.