sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளிய திருத்தணி முருகன்

/

தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளிய திருத்தணி முருகன்

தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளிய திருத்தணி முருகன்

தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளிய திருத்தணி முருகன்


ADDED : பிப் 01, 2025 01:02 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் கிராமத்தில், ஆண்டுதோறும் தை மாதத்தில் ஒருமுறை, திருத்தணி மலைக்கோவில் உற்சவர் முருகப்பெருமான், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

அந்த வகையில், நேற்று திருத்தணி முருகன் மலைக் கோவிலில் இருந்து, காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், படிகள் வழியாக நல்லாங்குளம் வந்து, அங்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார்.

பின், உற்சவர் முருகப் பெருமான் சித்துார் சாலை, சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, காலை 11:00 மணிக்கு, தரணிவராகபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தார்.

அங்கு, கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளித்தனர்.

மதியம், பிள்ளையார் கோவில் மண்டபத்தில், உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் உட்பட, பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், முருகப் பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us