/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளிய திருத்தணி முருகன்
/
தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளிய திருத்தணி முருகன்
தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளிய திருத்தணி முருகன்
தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளிய திருத்தணி முருகன்
ADDED : பிப் 01, 2025 01:02 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் கிராமத்தில், ஆண்டுதோறும் தை மாதத்தில் ஒருமுறை, திருத்தணி மலைக்கோவில் உற்சவர் முருகப்பெருமான், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அந்த வகையில், நேற்று திருத்தணி முருகன் மலைக் கோவிலில் இருந்து, காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், படிகள் வழியாக நல்லாங்குளம் வந்து, அங்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார்.
பின், உற்சவர் முருகப் பெருமான் சித்துார் சாலை, சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, காலை 11:00 மணிக்கு, தரணிவராகபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தார்.
அங்கு, கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளித்தனர்.
மதியம், பிள்ளையார் கோவில் மண்டபத்தில், உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் உட்பட, பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், முருகப் பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.