sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கூட்டு குடிநீருக்காக சேதமான சாலை சீரமைக்க ரூ.20 கோடி தேவை நிதி ஒதுக்கீட்டிற்கு காத்திருக்கும் திருத்தணி நகராட்சி

/

கூட்டு குடிநீருக்காக சேதமான சாலை சீரமைக்க ரூ.20 கோடி தேவை நிதி ஒதுக்கீட்டிற்கு காத்திருக்கும் திருத்தணி நகராட்சி

கூட்டு குடிநீருக்காக சேதமான சாலை சீரமைக்க ரூ.20 கோடி தேவை நிதி ஒதுக்கீட்டிற்கு காத்திருக்கும் திருத்தணி நகராட்சி

கூட்டு குடிநீருக்காக சேதமான சாலை சீரமைக்க ரூ.20 கோடி தேவை நிதி ஒதுக்கீட்டிற்கு காத்திருக்கும் திருத்தணி நகராட்சி


ADDED : ஜன 12, 2024 10:02 PM

Google News

ADDED : ஜன 12, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக, நகராட்சி பகுதியில் சேதப்படுத்திய, 150 சாலைகளை சீரமைப்பதற்கு, முதற்கட்டமாக, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் திட்ட மதிப்பு தயார் செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் மொத்தம், 523 தெருக்கள் உள்ளன. இங்கு, 14,000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும், 2,000த்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன.

இந்நிலையில் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருப்பாற்கடல் பகுதியில் இருந்து திருத்தணி நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு கடந்த, 2019ல் 110 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, குடிநீர் வாரியம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக திருத்தணி நகரத்தில், 21 வார்டுகளில் கூட்டுக்குடிநீர் கொண்டு செல்வதற்கு ராட்சத குழாய்கள் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கு வதற்கு நகராட்சி சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தி குழாய் அமைக்கப்பட்டு வந்தன.

இதனால் நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாகாததால் சாலைகள் சீரமைக்கவில்லை.

தற்போது கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் குழாய்கள் புதைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், நகராட்சி நிர்வாகம் சேதம் அடைந்த சாலைகள் விவரம் சேகரித்து வருகிறது.

அந்த வகையில்,முதற்கட்டமாக, 150 சாலைகளை ஆய்வு செய்து அதை சீரமைப்பதற்கு, 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என நிர்வாகம் திட்டமதிப்பு தயார் செய்து நகராட்சிகளின் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் கூறியதாவது:

நகராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் முழுமையாக முடிந்த சாலைகள் மட்டும் சீரமைப்பதற்கு முடியும். தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், 150 சாலைகளில் குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிந்துள்ளன என சான்று வழங்கப்பட்டுள்ளன.

அந்த சாலைகளை முதற்கட்டமாக சீரமைப்பதற்கு திட்ட மதிப்பு, 20 கோடி ரூபாய் தேவை என தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

நிதியுதவி மற்றும் அரசாணை கிடைத்ததும், பணிகளுக்கு டெண்டர் விட்டு ஆறு மாதத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படும். மீதமுள்ள சாலைகள் படிப்படியாக நிதியுதவி பெற்று சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us