ADDED : ஆக 28, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணியில் பணியாற்றி வந்த பெண் இன்ஸ்பெக்டர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர், கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், வேலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது காலதாமதம் செய்வது, சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் மலர், ஓரிரு நாட்களில், திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார் என, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
