/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இளம்பெண்ணை தாக்கிய மூன்று பேருக்கு வலை
/
இளம்பெண்ணை தாக்கிய மூன்று பேருக்கு வலை
ADDED : பிப் 12, 2026 05:43 AM
திருவள்ளூர்: சொத்து தகராறில் இளம்பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி அனுபிரியா, 31. இவருக்கும், உறவினர் கந்த சாமி, 54, என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 9ம் தேதி மாலை, இவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் கந்தசாமி, அவரது மகன் திலிப்குமார், மற்றும் கதிர்வேல் ஆகிய மூவரும், அனுபிரியாவை தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து, நேற்று முன்தினம் அனுபிரியா அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

