ADDED : பிப் 19, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூச்சி அத்திபேடு கிராமத்தில் கஞ்சா விற்பதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் தும்பாக்கம் சரவணன், 22, அலமாதி சஞ்சய்ராஜ், 20, பாலகுமார், 21 என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து, மூன்று மொபைல் போன்கள், பைக் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

