sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தண்டவாளத்தில் மீட்கப்பட்ட ஆண் சடலம் கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம் கள்ளக்காதலி உட்பட மூவர் கைது

/

தண்டவாளத்தில் மீட்கப்பட்ட ஆண் சடலம் கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம் கள்ளக்காதலி உட்பட மூவர் கைது

தண்டவாளத்தில் மீட்கப்பட்ட ஆண் சடலம் கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம் கள்ளக்காதலி உட்பட மூவர் கைது

தண்டவாளத்தில் மீட்கப்பட்ட ஆண் சடலம் கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம் கள்ளக்காதலி உட்பட மூவர் கைது


ADDED : ஆக 10, 2025 12:49 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்ட ஆண் சடலம் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில், கள்ளக்காதலி மற்றும் இரு வாலிபர்களை, ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியில், வெட்டுக்காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை, கடந்த ஜூன் 19ம் தேதி கைப்பற்றி, திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

அதில், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் அரவிந்தன் என்ற மேத்யூ, 30, என்பது தெரிந்தது. காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் வேலை செய்த இவருக்கு, ஜான்சி என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

மீட்கப்பட்ட மேத்யூவின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைகப்பட்டது.

மகன் சாவில் மர்மம் இருப்பதாக, மேத்யூவின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிந்த போலீசார், அதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையில், அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது உறுதியானது.

விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த உஷா, 29, என்ற பெண்ணுடன், மேத்யூ கள்ளத்தொடர்பில் இருந்ததும், கள்ளக்காதல் விவகாரத்தில், கூலிப்படையை வைத்து, மேத்யூவை வெட்டி கொலை செய்த உஷா, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசியது உறுதியானது.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், உஷா, ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சந்த், 18, மற்றும் விஷ்வா, 19, ஆகிய மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள பால்ராஜ் என்பவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us