sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று பேர் படுகாயம்

/

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று பேர் படுகாயம்

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று பேர் படுகாயம்

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று பேர் படுகாயம்


ADDED : அக் 21, 2025 11:23 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து, மூன்று வடமாநில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ராமசந்திராபுரம் கிராமத்தில், தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, பழைய இரும்புகளை உருக்கும் கொதிகலன், அழுத்தம் அதிகரிப்பால் வெடித்து சிதறியது.

அப்போது, கொதிகலன் அருகே பணியில் இருந்த மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார் யாதவ், 32, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் யாதவ், 45, அக்பர் ஆலம், 31, ஆகிய மூன்று வடமாநில தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

ஆபத்தான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பவன்குமார் யாதவ் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us