/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்கல் சூளையில் மூவர் பலி வெங்கல் அருகே பதற்றமான சூழல்
/
செங்கல் சூளையில் மூவர் பலி வெங்கல் அருகே பதற்றமான சூழல்
செங்கல் சூளையில் மூவர் பலி வெங்கல் அருகே பதற்றமான சூழல்
செங்கல் சூளையில் மூவர் பலி வெங்கல் அருகே பதற்றமான சூழல்
ADDED : ஜன 21, 2025 12:11 AM

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே, தனியார் செங்கல் சூளையில் நான்கு மாத குழந்தை உட்பட மூவர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்தோர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதில், மேலிக்கொண்டையூர் கிராமத்தில் அன்னை செங்கல் சூளை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ஸ்ரீதர். இங்கு ஒடிசா மாநிலம், பலாங்கீர் பகுதியைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் தங்கி, பணியாற்றி வருகின்றனர்.
கடந்த, 18ம் தேதி, இங்கு பணியாற்றி வந்த கன்குசரன் போகியின் நான்கு மாத ஆண் குழந்தை மூச்சு திணறல் காரணமாக திடீரென இறந்தது. நேற்று முன்தினம் அங்கு பணியாற்றி வந்த, 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதில், ராமகிருஷ்ணபாக், 65, என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று மாலை, ஹாலதர்சண்டா, 52, என்பவரும் உயிரிழந்தார்.
இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து, செங்கல் சூளையில் ஏற்பட்ட இறப்பு குறித்து, விசாரித்து வருகின்றனர். தரப் பரிசோதனைக்குப் பின்தான், வயிற்றுப்போக்கு மற்றும் உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., லோகேஸ்வரன் தலைமையில், வெங்கல் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபப்பி, திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒரே செங்கல் சூளையில் நான்கு நாட்களுக்கு முன், நான்கு மாத குழந்தை மற்றும் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் இருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
காலியான சூளை...
மேலக்கொண்டையூர்கிராம செங்கல் சூளையில் நான்கு மாத குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் இறந்த சம்பவம் அங்கு பணியாற்றி வந்தவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, 250க்கும் மேற்பட்டோர், தங்களது குடும்பத்துடன் வேறு இடத்திற்கு சென்று பணியாற்ற சென்றதால், செங்கல் சூளை காலியானது.

