/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பார்க்கிங் ஏரியாவாக மாறிய திருவாலங்காடு சன்னிதி சாலை
/
பார்க்கிங் ஏரியாவாக மாறிய திருவாலங்காடு சன்னிதி சாலை
பார்க்கிங் ஏரியாவாக மாறிய திருவாலங்காடு சன்னிதி சாலை
பார்க்கிங் ஏரியாவாக மாறிய திருவாலங்காடு சன்னிதி சாலை
ADDED : அக் 20, 2024 12:44 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு சன்னிதி தெருவில் செயல்படும் இந்தியன் வங்கியில் மணவூர், சின்னம்மாபேட்டை, கூடல்வாடி, வீரராகவபுரம் உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25, 000க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
மகளிர் குழு மற்றும்வாடிக்கையாளர் என, 500 பேர் தினமும் வங்கிக்கு பணம் பரிவர்த்தனை செய்ய வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் வங்கியில் கூட்டம் அலைமோதும்.
சமீபகாலமாக இருசக்கர வாகனத்தில் வருவோர் வங்கி எதிரே உள்ள சன்னிதி தெரு சாலையில் தாங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வங்கிக்கு செல்கின்றனர்.
இதனால் அந்த வழியில் நான்கு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் செல்ல முடியாத அளவு நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்கிறது.
எனவே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது திருவாலங்காட ுகாவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.