/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலுக்கு திருப்பதி பட்டு வஸ்திரம்
/
திருத்தணி கோவிலுக்கு திருப்பதி பட்டு வஸ்திரம்
ADDED : ஜூலை 27, 2011 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலுக்கு, திருப்பதி பட்டு வஸ்திரம்
அளிக்கப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலுக்கு, 10 ஆண்டுகளாக திருப்பதி
பட்டு வஸ்திரம், ஆடிக்கிருத்திகை அன்று, தொடர்ந்து அளிக்கப்பட்டு
வருகிறது.நேற்று, முருகப்பெருமானுக்கு அணிவிக்க, திருப்பதி தேவஸ்தானம்
சார்பில், தேவஸ்தான ஆணையர் எல்.வி.சுப்பிரமணியம், இணை ஆணையர் சீனிவாசன்,
கூடுதல் எஸ்.பி., சிங் ஆகியோர், பட்டு வஸ்திரங்களுடன் வந்து, முன்னாள்
அறங்காவலர் எஸ்.நரசராஜு, இணை ஆணையர் கவிதா ஆகியோரிடம் வழங்கினர்.