sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை

/

செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை

செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை

செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை


ADDED : ஜன 12, 2024 10:22 PM

Google News

ADDED : ஜன 12, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தேனாம்பேட்டை, செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறிகள் விற்பனை நிலையம் இன்று துவங்கப்பட உள்ளது.

பல்வேறு மாவட்டங்களில், அதலைக்காய், மூக்குத்தி அவரை, கண்ணாடி கத்திரி, உருட்டு வெண்டை, சிறகு அவரை, டைகர் பீன்ஸ், நீள தட்டை பயிறு, நெய் மிளகாய், சாத்துார் வெள்ளரி உள்ளிட்ட, 37 வகையான பாரம்பரிய காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறை மானிய உதவிகளை வழங்கி வருகிறது. அவற்றின் விற்பனையை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக, சென்னை, தேனாம்பேட்டை, செம்மொழி பூங்காவிலும் சிறப்பு விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று விற்பனை துவங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை இயக்குனர் பிருந்தாதேவி கூறியதாவது:

செம்மொழி பூங்காவில், வாரம்தோறும் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் பாரம்பரிய காய்கறிகள் விற்பனை நிலையம் செயல்படும். பாரம்பரிய காய்கறிகள் மட்டுமின்றி பலா பிஞ்சு, தேங்காய் பூ, அரிய வகை கீரைகள், சீசனுக்கு ஏற்ப இங்கு விற்கப்படும்.

விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து, வாகன வாடகை மட்டும் கணக்கிட்டு, லாபம் நோக்கமின்றி விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து


பொங்கல் பண்டிகை நெருங்கியதை அடுத்து, கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து துவங்கியுள்ளது. கரும்பு, மஞ்சள், வாழை இலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் கட்டண அடிப்படையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு காய்கறிகள் வரத்தும் துவங்கியுள்ளது. வெற்றிலை வள்ளி கிழங்கு ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சிறுகிழங்கு 60, பிடி கருணை கிழங்கு 40, மொச்சைபயிறு 60, துவரை 60, பச்சை பட்டாணி 40, பாசிப்பயிறு 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.








      Dinamalar
      Follow us