/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் பயணியருக்கு இடையூறு: மாணவர்கள் 6 பேருக்கு 'காப்பு'
/
ரயில் பயணியருக்கு இடையூறு: மாணவர்கள் 6 பேருக்கு 'காப்பு'
ரயில் பயணியருக்கு இடையூறு: மாணவர்கள் 6 பேருக்கு 'காப்பு'
ரயில் பயணியருக்கு இடையூறு: மாணவர்கள் 6 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜன 11, 2026 06:30 AM
அரக்கோணம்: ரயில் பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அநாகரிகமான வாசகங்கள் அடங்கிய பேனருடன் கும்மாளம் போட்ட ஆறு மாணவர்களை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் புறநகர் மின்சார ரயில், நேற்று முன்தினம் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது. இதில், ஆறு மாணவர்கள் ஏறினர். அவர்கள், ரயில் பெட்டியின் வழியை மறித்தபடி, கையில் பொங்கல் விழா பேனரை பிடித்தவாறு, ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளம் அடித்தனர்.
பேனரில், சென்னை பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் குறித்து, அநாகரிக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
மேலும், அவர்களின் செயல், மற்ற பயணியருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதால், அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார்விரைந்து சென்று, சென்னை மாநிலக் கல்லுாரி மாணவர்களான, கும்பினிபேட்டை சேர்ந்த ரகுபதி, 20, சிவபதி, 21, திருத்தணியை சேர்ந்த ராகுல், 18, உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த பேனரையும் பறிமுதல் செய்தனர்.

