sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தகவல் அறியும் சட்டம் ஆவடியில் பயிற்சி வகுப்பு

/

தகவல் அறியும் சட்டம் ஆவடியில் பயிற்சி வகுப்பு

தகவல் அறியும் சட்டம் ஆவடியில் பயிற்சி வகுப்பு

தகவல் அறியும் சட்டம் ஆவடியில் பயிற்சி வகுப்பு


ADDED : செப் 22, 2024 07:49 PM

Google News

ADDED : செப் 22, 2024 07:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி மாநகராட்சி சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து, ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது.

ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி தலைமையில் நடந்த பயிற்சி வகுப்பில், திருவேற்காடு, பூந்தமல்லி, திருவள்ளூர், திருநின்றவூர், பொன்னேரி மற்றும் திருத்தணி நகராட்சிகளை சேர்ந்த வருவாய்த்துறையினர், நிர்வாக அலுவலக அலுவலர்கள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், தகவல் அறியும் சட்டம் 2005 ன் படி, பொதுமக்கள் தகவல் கோரும் மனுக்களில், எந்த தகவல் வழங்க கூடாது, வழங்கலாம், தகவல்கள் எப்படி வழங்க வேண்டும் என்பது குறித்து மகளிர் மேம்பாட்டுத் துறை, நிதி ஆலோசகர் ராஜேந்திரன் பயிற்சி வழங்கினார்.

மேலும், சட்டப்பிரிவு - 7(9) ன் படி, அதிகமான தகவல்கள் கூறியிருந்தால், தகவல் கொடுக்க இயலாது என தெரிவிக்கலாம். சட்டப்பிரிவு - 8(1)(9) ன் படி, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்கள் வழங்க தேவையில்லை.

சட்டப்பிரிவு - 8(1)(பி) ன் படி, நீதிமன்றத்தில் இடைக்கால தடை கொடுக்கப்பட்ட வழக்குகள் மீது தகவல் வழங்க தேவையில்லை. சட்டப்பிரிவு - 8(1)(டி) ன் படி, தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் வழங்க தேவையில்லை.

அதேபோல், பணியாளர்களின் பணிப் பதிவேடு விவரங்கள், குற்றச்சாட்டு விவரங்கள், பணி, வாரிசுதாரர்கள், குடும்பம், சாதி, முகவரி, மொபைல் எண், அடையாளம் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us