sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காசநோய் கண்டறியும் நவீன ஆய்வகம்  திறப்பு

/

காசநோய் கண்டறியும் நவீன ஆய்வகம்  திறப்பு

காசநோய் கண்டறியும் நவீன ஆய்வகம்  திறப்பு

காசநோய் கண்டறியும் நவீன ஆய்வகம்  திறப்பு


ADDED : பிப் 18, 2025 09:33 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:திருவள்ளூர் மாவட்டத்தில், 'காசநோய் இல்லாத தமிழகம் - 2025' இலக்கை அடைவதற்கான, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி பகுதியில் காசநோய் ஒழிப்பு துரிதப்படுத்தும் வகையில், ஏ.வி.என்.

எல்., 'நிக் ஷாய் மித்ரா' திட்டத்தின் கீழ், சி.எஸ்.ஆர்., நிதியின் வாயிலாக, காசநோய் கண்டுபிடிக்கும் கருவி வாங்குவதற்கு 24.43 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி வாயிலாக, மாநிலத்தில் முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி கொள்முதல் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கருவி வாயிலாக, காசநோயை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். ஆவடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகத்தை, அமைச்சர் நாசர் நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதாப், மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us