ADDED : அக் 07, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, எம்.எம்.நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 35. நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் 'ஹோண்டா ஸ்பிளண்டர்' பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். நேற்று காலை பார்த்தபோது, பைக் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து, ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சில மாதங்களாக சின்னம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.