sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

12 யூனிட் மணல் பறிமுதல் இருவர் கைது

/

12 யூனிட் மணல் பறிமுதல் இருவர் கைது

12 யூனிட் மணல் பறிமுதல் இருவர் கைது

12 யூனிட் மணல் பறிமுதல் இருவர் கைது


ADDED : டிச 01, 2024 08:37 PM

Google News

ADDED : டிச 01, 2024 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக ஆற்று மணல் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலையில் கைவண்டூர் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக திருவள்ளூர் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட இரு ரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அதில் லாரியில் அரசு அனுமதி இல்லாமல் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியில் இருந்த 5, 7 யூனிட் என மொத்தம் 12 யூனிட் ஆற்று மணலை லாரிகளுடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் லாரி ஓட்டுனர்களான ஆந்திர மாநிலம் நெல்லுார் பகுதியைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், 40 மற்றும் திருப்பதியைச் சேர்ந்த கோபி, 46 ஆகிய இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் லாரி உரிமையாளரான ஆந்திரமாநிலம் காளஹஸ்தி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us