/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது
ADDED : டிச 20, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை சி.ஐ.டி., நகரில் போதை பொருட்கள் புழக்கம் அதிகம் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சைதாப்பேட்டை போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
அதில், கேரளா மாநிலம், கண்ணுாரை சேர்ந்த ரமீஷ், 25, ஈசாக், 29, ஆகியோர், மெத் ஆம்பெட்டமைன் என்ற போதை பொருளை புழக்கத்தில் விடுவது தெரிந்தது.
போலீசார், நேற்று இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 3 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.