/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காப்பர் ஒயர் திருடிய இரண்டு பேர் சிக்கினர்
/
காப்பர் ஒயர் திருடிய இரண்டு பேர் சிக்கினர்
ADDED : பிப் 21, 2026 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே காப்பர் ஒயர் திருடிய இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கனகம்மாசத்திரம் அடுத்த புதுார் டிடி காலேஜ் அருகே, சில நாட்களுக்கு முன், 5 கிலோ காப்பர் ஒயர் திருடுபோனது. இதுகுறித்து வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று, திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சி மாதா கோவில் இருளர் காலனியை சேர்ந்த ஜெயகுமார், 19, ரேவன்குமார், 24, இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

