sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'காஸ்' கசிந்து தீ விபத்து இரு மூதாட்டிகள் படுகாயம்

/

'காஸ்' கசிந்து தீ விபத்து இரு மூதாட்டிகள் படுகாயம்

'காஸ்' கசிந்து தீ விபத்து இரு மூதாட்டிகள் படுகாயம்

'காஸ்' கசிந்து தீ விபத்து இரு மூதாட்டிகள் படுகாயம்


ADDED : அக் 08, 2025 10:09 PM

Google News

ADDED : அக் 08, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:சமையல் செய்யும்போது, சிலிண்டரில் இருந்து 'காஸ்' கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில், மூதாட்டிகள் இருவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீஞ்சூர் அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர் காசியம்மாள், 67. இவர், வீட்டின் அருகே மீன்கடை வைத்துள்ளார். நேற்று காலை, மீன் வியாபாரத்தை கவனித்தபடி, வீட்டில் சமையல் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மீன் வாங்குவதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த லலிதா, 70, என்பவர் காசியம்மாள் கடைக்கு வந்தார்.

அவருடன் காசியம்மாள் பேசி கொண்டிருந்த போது, வீட்டில் இருந்து காஸ் கசிந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, இருவரும் வீட்டின் உள்ளே சென்றனர். காஸ் வீடு முழுதும் பரவிய நிலையில், திடீரென தீப்பிடித்தது. இதில், இரு மூதாட்டிகளும் சிக்கினர்.

அவர்களது அலறல் சத்தம்கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தண்ணீரை ஊாற்றி தீயை அணைத்து, இருவரையும் மீட்டனர். இதில், காசியம்மாள், லலிதா பலத்த தீக்காயமடைந்தனர். அவர்கள், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us