ADDED : அக் 27, 2024 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:வீராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேலன், 36. கார் ஓட்டுனர். நேற்று காலை பெரியபாளையம் அருகே ஆயலுார் கிராமத்திற்கு சென்று திரும்பினார். அப்போது ஆயலுார் கிராமத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 20, விஜய், 25 ஆகிய இருவர் கத்தியை காட்டி மிரட்டி, செந்தில்வேலனிடம் இருந்த,1,700ஐ பறித்துக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து செந்தில்வேலன் கொடுத்த புகாரின்படி, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, தனுஷ், விஜய் ஆகிய இருவரை கைது செய்தனர்.

