sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வெள்ளி திருட்டு வழக்கு மேலும் இருவர் சிக்கினர் 510 கிலோ பறிமுதல்

/

வெள்ளி திருட்டு வழக்கு மேலும் இருவர் சிக்கினர் 510 கிலோ பறிமுதல்

வெள்ளி திருட்டு வழக்கு மேலும் இருவர் சிக்கினர் 510 கிலோ பறிமுதல்

வெள்ளி திருட்டு வழக்கு மேலும் இருவர் சிக்கினர் 510 கிலோ பறிமுதல்


ADDED : ஏப் 13, 2025 09:05 PM

Google News

ADDED : ஏப் 13, 2025 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:லண்டனில் இருந்து 39,000 கிலோ எடையிலான 1,305 வெள்ளிக்கட்டிகளை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இறக்குமதி செய்தது.

இவை, சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில், கடந்த வாரம் கன்டெய்னரில் வந்திறங்கியது. அந்த கன்டெய்னரில் இருந்து, 922 கிலோ எடையிலான 30 வெள்ளிக் கட்டிகள் மாயமாகின. இதன் மதிப்பு, 9 கோடி ரூபாய். இதுகுறித்து, காட்டூர் போலீசார் விசாரித்தனர்.

கடந்த 11ம் தேதி, மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். நேற்று, சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகம்மது, 56, மணலியை சேர்ந்த சண்முகவேல், 32, ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில், தற்போது வரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 510 கிலோ கொண்ட, 17 வெள்ளிக்கட்டிகள், 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us