/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பக்தர்கள் பயணித்த பஸ் மோதி இருவர் உயிரிழப்பு
/
பக்தர்கள் பயணித்த பஸ் மோதி இருவர் உயிரிழப்பு
ADDED : பிப் 10, 2025 12:21 AM
ஆரணி; மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் பயணித்த பஸ் மோதிய விபத்தில், டூ - வீலரில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த பக்தர்கள், மேல்மருவத்துாருக்கு பஸ்சில் சென்று மீண்டும் ஊர் திரும்பினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி - வேலுார் சாலையில், சோமந்தாங்கல் கூட்ரோடு அருகே நேற்று மதியம் பஸ் வந்தது.
அப்போது, டி.வி.எஸ்., --- எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில் சென்ற ஆரணி அடுத்த கீழ்நகரை சேர்ந்த கூலி தொழிலாளிகள் கோபி, 37, கணேசன், 37, மீது பஸ் மோதியதில், படுகாயமடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.