/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ - வீலர் எரிப்பு: நான்கு பேர் கைது
/
டூ - வீலர் எரிப்பு: நான்கு பேர் கைது
ADDED : மார் 08, 2026 05:48 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் 30. தனியார் தொழிற்சாலை ஊழியர். கடந்த 6ம் தேதி இரவு, இவருக்கு சொந்தமான 'புல்லட்' இருசக்கர வாகனத்தை இரவு 12:00 மணியளவில் மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில் இருசக்கர வாகனம் முழுதும் எரிந்து நாசமானது.
திருவாலங்காடு போலீசார் விசாரித்தனர். இதில், நார்த்தவடா கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் 27, ஜெகன், 23, பேரரசு, 19, சூர்யா, 23 உள்ளிட்ட நால்வரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தமிழரசன் பணிபுரியும் தொழிற்சாலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் வேலைக்கு சரிவர செல்லாததால், கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.
'இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார், நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

