நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில் வசித்து வருபவர் அஜய், 20; தனியார் ஊழியர். கடந்த 20ம் தேதி இரவு, தன் 'யமஹா ஆர்15' இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார்.
மறுநாள் காலை, இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

