sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சர்ச்சுக்கு சென்று வீடு திரும்பிய இரு வாலிபருக்கு அரிவாள் வெட்டு

/

சர்ச்சுக்கு சென்று வீடு திரும்பிய இரு வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சர்ச்சுக்கு சென்று வீடு திரும்பிய இரு வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சர்ச்சுக்கு சென்று வீடு திரும்பிய இரு வாலிபருக்கு அரிவாள் வெட்டு


ADDED : டிச 26, 2024 03:20 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் : செய்யூர் பகுதி வி.கே.ஆர்., நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் நவின், 22, இவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ் சி., இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தேவராஜபுரம் பகுதியில் உள்ள சர்ச்சுக்கு சென்று பிராத்தனை முடித்தார். நேற்று அதிகாலை 2:45 மணிக்கு தன் இருசக்கர வாகனத்தில் நண்பர் சச்சின் உடன் வீட்டிற்கு சென்றார்.

தேவராஜபுரம் செல்லியம்மன் கோவில் தெருவில் வந்த போது, தேவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுஜய், கிஷோர் குமார் உள்ளிட்ட 10 பேர், நவின் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, நவின் மற்றும் அவரது நண்பர் சச்சின் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் நவினின் தலை, முதுகு, வலது கையிலும், சச்சினுக்கு மூக்கு, வாய் மற்றும் வலது கண்ணிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இவர்களின் அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியினர் இருவரையும் மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். தொடர் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து செய்யூர் போலீசார் நடத்திய விசாரணையில். கடந்த அக்டோபரில் சச்சினின் தங்கையை சுஜய், கிஷோர் குமார் ஆகிய இருவரும் கிண்டல் செய்துள்ளனர். சச்சின் தன் நண்பர்களுடன் சென்று சுஜய், கிஷோர் குமாரை தாக்கி உள்ளார்.

இதுகுறித்த புகாரில் செய்யூர் போலீசார், சச்சின் உட்பட மூவரை கைது செய்தனர். அவர்கள் தற்போது ஜாமினில் வந்துள்ளனர்.

இதற்கு பழிவாங்கும் விதமாக நேற்று நவின் மற்றும் சச்சினை சுஜய் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியது தெரிந்தது. செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய 10 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us