sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அனுமதியின்றி கால்வாய் பணி குழாய் உடைந்து குடிநீர் வீண்

/

அனுமதியின்றி கால்வாய் பணி குழாய் உடைந்து குடிநீர் வீண்

அனுமதியின்றி கால்வாய் பணி குழாய் உடைந்து குடிநீர் வீண்

அனுமதியின்றி கால்வாய் பணி குழாய் உடைந்து குடிநீர் வீண்


ADDED : அக் 27, 2025 11:20 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ணுார்: பண்ணுாரில் அரசு அனுமதியின்றி தனிநபர் ஒருவர் கால்வாய் தோண்டும் பணி மேற்கொண்டதில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

திருப்பந்தியூர் ஊராட்சி பண்ணுாரைச் சேர்ந்தவர் ஜோஸ்பின், 50.

இவர், கடந்த மாதம் 28ம் தேதி, தன் வீட்டிலிருந்து கழிவுநீர் செல்லும் வகையில், எவ்வித அனுமதியும் பெறாமல், குடியிருப்பு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி மேற்கொண்டார்.

இதில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட இரு குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதையடுத்து, அப்பகுதிவாசிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீசார், அப்பகுதிக்கு விரைந்து வந்து, பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினர்.

இதனால் சேதமடைந்த குழாய் வழியாக ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us