/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : ஜூலை 20, 2025 10:36 PM
திருவள்ளூர்:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களும், அதற்கு மேலான கல்வி தகுதி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, கடந்த ஜூன் 30ம் தேதி, ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து, வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் வரும் செப்., 30ம் தேதியன்று, 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
மாதந்தோறும், பத்தாம் வகுப்பு தோல்விக்கு 200, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு 300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு 400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 600 ரூபாய் என, வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

