/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
/
வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 11, 2025 02:10 AM

போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம். திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் இருந்து இந்த ஊராட்சி வழியே பாக்குபேட்டை, வலசைவெட்டிக்காடு, இலுப்பூர் பாப்பரம்பாக்கம் மற்றும் மண்ணுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் உள்ள 15க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து நெடுஞ்சாலையில் வேகத்தடைகளுக்கு ஒளிரும் வெள்ளை வர்ணம் பூச வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.