/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குற்ற வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி கைது
/
குற்ற வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி கைது
ADDED : பிப் 22, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே துராபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 32. பிரபல ரவுடி. கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர் மீது கொலை, வழிப்பறி உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்கு விசாரணைக்காக, பல மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று, எளாவூர் அடுத்த வீராச்சாமி நகரில், போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். ஆரம்பாக்கம் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து புழல் சிறையில் அடைத்தனர்.