ADDED : அக் 25, 2024 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமழிசை:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்பட்ட குண்டுமேடு பகுதியில் வெள்ளவேடு காவல் நிலைய வாகன சோதனைச் சாவடி உள்ளது.
இந்த வாகன சோதனைச் சாவடி நிலையம் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல் இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெயிலில் காயந்து, மழையில் நனைந்து துருப்பிடித்து புதருக்குள் மாயமாகி வீணாகி வருகிறது.
இந்த பறிமுதல் வாகனங்களை அகற்ற காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.