ADDED : பிப் 17, 2025 11:11 PM
பொதட்டூர்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி ஒன்றியத்தில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் விசைத்தறி நெசவில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசைத்தறிகளில், லுங்கி, சேலை, சுடிதார் உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. லுங்கி அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு கேட்டு, நேற்று, வேலை நிறுத்தத்தை துவக்கியுஉள்ளனர்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, வங்கனுார், பொதட்டூர்பேட்டை, புச்சிரெட்டிபள்ளி, மத்துார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், குருவராஜபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்கள், நேற்று முதல், தறிக்கூடங்களில் வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர்.

