ADDED : செப் 25, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் : திருவள்ளூர் பால விநாயர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜித்குமார், 39. தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரியும் இவருக்கு நிர்மலா, 38 என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 22ம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நிர்மலா கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.