/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக மாறுமா?
/
பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக மாறுமா?
பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக மாறுமா?
பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக மாறுமா?
ADDED : செப் 23, 2025 12:12 AM

திருத்தணி:தரம் உயர்த்தப்பட்ட பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை, தாலுகா மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி தாலுகாவில், திருத்தணி அரசு பொது மருத்துவமனை, ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதில், பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும், ஏழு ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.
இங்கு, மூன்று மருத்துவர்கள், 15க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பிசியோதெரப்பிஸ்ட், சித்த மருத்துவர், யுனானி மருத்துவர் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியருக்கு பிரசவம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் உள்நேயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு தினமும், 400 - 600 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம், திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ளதால், 75க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
திருத்தணி அரசு மருத்துவமனை, கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால், திருத்தணி தாலுகாவில் ஒரு அரசு பொது மருத்துவமனை உருவாக்க வாய்ப்பு அதிகளவில் உள்ளன.
எனவே, பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை, மீண்டும் தரம் உயர்த்தி தாலுகா மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என, திருத்தணி தாலுகா மக்களின் கோரிக்கையாக உள்ளது.
எனவே, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரக்கோணம் எம்.பி., ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.