sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊராட்சிகளில் செயலிழந்த கைபம்புகள் மழைநீர் தொட்டியாக மாற்றப்படுமா?

/

ஊராட்சிகளில் செயலிழந்த கைபம்புகள் மழைநீர் தொட்டியாக மாற்றப்படுமா?

ஊராட்சிகளில் செயலிழந்த கைபம்புகள் மழைநீர் தொட்டியாக மாற்றப்படுமா?

ஊராட்சிகளில் செயலிழந்த கைபம்புகள் மழைநீர் தொட்டியாக மாற்றப்படுமா?


ADDED : மார் 31, 2025 03:09 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள சுடுகாடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில், தண்ணீர் தேவைக்காக கைபம்புகள் அமைக்கப்பட்டன. இவை, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாமல் செயலிழந்தன.

இந்த இரு ஒன்றியங்களிலும், 200க்கும் மேற்பட்ட கைபம்புகள் செயலிழந்து, காட்சி பொருளாக இருக்கின்றன. சுடுகாடு மற்றும் குடியிருப்பு பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், செயலிழந்த கை பம்புகளை, மழைநீர் சேகரிப்பு தொட்டிகளாக மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு இடத்திலும் உள்ள கைபம்புகள், 70 - 90 அடி ஆழம் கொண்டவையாக உள்ளன. இவற்றில் உள்ள இரும்பு தளவாடங்களை அகற்றிவிட்டு, மழைநீர் தொட்டியாக மாற்ற வேண்டும். இது, நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக மாறும். மழைநீர் சேகரிப்பு தொட்டிகளையும் கண்துடைப்பிற்காக அமைக்காமல், சரியான திட்டமிடலுடன் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us