sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெல் தரம் பிரிக்கும் கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

/

நெல் தரம் பிரிக்கும் கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

நெல் தரம் பிரிக்கும் கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

நெல் தரம் பிரிக்கும் கூடம் பயன்பாட்டுக்கு வருமா?


ADDED : ஜூன் 27, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் ஊராட்சியில் கிராம சேவை மையத்தின் பின்புறம் நெல் தரம் பிரிக்கும் கூடம் அமைந்துள்ளது.

கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பில், நெற்களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெல் தரம் பிரிக்கும் கூடம் செயல்படாமல் பூட்டிக் கிடப்பதால், கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலே பாழாகும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வரும் அறுவடை பருவத்தில், பழையனுாரில் நெல் தரம் பிரிக்கும் கூடத்தை, நெல் கொள்முதல் நிலையமாக அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us