sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழவேற்காடில் கிளிஞ்சல்கள் சேகரிப்பில் பெண்கள் ஆர்வம்

/

பழவேற்காடில் கிளிஞ்சல்கள் சேகரிப்பில் பெண்கள் ஆர்வம்

பழவேற்காடில் கிளிஞ்சல்கள் சேகரிப்பில் பெண்கள் ஆர்வம்

பழவேற்காடில் கிளிஞ்சல்கள் சேகரிப்பில் பெண்கள் ஆர்வம்


ADDED : டிச 26, 2024 06:40 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு : பழவேற்காடு கடல் பகுதியில், சில தினங்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு காரணங்களால் கடலில் உயிரிழக்கும் கிளிஞ்சல் ஓடுகள் ஆர்ப்பரித்து வரும் அலைகளில் அடித்து வரப்பட்டு கடற்கரை முழுதும் ஒதுங்குகின்றன.

வைரவன்குப்பம், பழைய சாட்டனகுப்பம், கோரைகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பெண்கள் அவற்றை சேகரித்து வருகின்றனர். மேலும், முகத்துவாரம் அருகே உள்ள கடற்கரை பகுதிகளிலும் இவை அதிகளவில் இருப்பதால், அவற்றை சேகரித்து படகுகளில் கொண்டு வந்து ஏரியின் கரைகளில் கொட்டி வைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

ஓடுகள் உடையாமல் இருப்பவை கலை பொருட்களை தயாரிக்கவும், மற்றவை சுண்ணாம்பு தயாரிக்க அதற்கான தொழிற்சாலைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:

கடலில் கிடைக்கும் அனைத்தும் உயிரினங்களும், ஏதேனும் ஒரு வகையில் மனித இனத்திற்கு பயன்படுகிறது. மீன், இறால் உள்ளிட்டவை உணவு தேவைக்கும், சங்கு,கிளிஞ்சல் ஆகியவை கலை பொருட்கள் தயாரிக்கவும் உதவுகின்றன.

இதன் வாயிலாக வருவாய் ஈட்டுவதற்கும் உகந்ததாக இருக்கிறது. டிசம்பர் - ஜனவரி மாதங்களில் கிளிஞ்சல்கள் அதிகளவில் கரை ஒதுங்கும். அவற்றை சேகரித்து வருவாய் ஈட்டி, அன்றாட செலவினங்களுக்கு பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us