sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பூந்தமல்லியில் பணிமனை திறப்பு 125 மின்சார பேருந்துகள் இயக்கம்

/

 பூந்தமல்லியில் பணிமனை திறப்பு 125 மின்சார பேருந்துகள் இயக்கம்

 பூந்தமல்லியில் பணிமனை திறப்பு 125 மின்சார பேருந்துகள் இயக்கம்

 பூந்தமல்லியில் பணிமனை திறப்பு 125 மின்சார பேருந்துகள் இயக்கம்


ADDED : டிச 20, 2025 05:50 AM

Google News

ADDED : டிச 20, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர போக்குவரத்துக் கழகம், புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க, அசோக் லேலண்டின் துணை நிறுவனமான, ஓ.எச்.எம்., குளோபல் மொபிலிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏற்கனவே, வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பேருந்துகளும், பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து பணிமனை, 43.53 கோடி ரூபாய் மதிப்பில், மின்சார பேருந்து பணிமனையாக மேம்படுத்தப்பட்டது. இந்த பணிமனையை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார். மேலும், 214.50 கோடி ரூபாய் மதிப்பில், 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்துகளும், 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என, 125 பேருந்துகள் சேவையையும் அவர் துவக்கி வைத்தார்.மின்சார பேருந்தில் உதயநிதி பயணம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us