/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தங்கானுாரில் சேவல் சண்டை போட்டி தயார் செய்யும் பணியில் இளைஞர்கள்
/
தங்கானுாரில் சேவல் சண்டை போட்டி தயார் செய்யும் பணியில் இளைஞர்கள்
தங்கானுாரில் சேவல் சண்டை போட்டி தயார் செய்யும் பணியில் இளைஞர்கள்
தங்கானுாரில் சேவல் சண்டை போட்டி தயார் செய்யும் பணியில் இளைஞர்கள்
ADDED : ஜன 24, 2024 10:55 PM

திருவள்ளூர்:தமிழகத்தில் அழியும் தருவாயில் உள்ள சண்டை சேவல் இனத்தை பாதுகாக்கும் விதமாக, ஆண்டுதோறும் திருவள்ளூர் அடுத்த தங்கானுார் கிராமத்தில் நீதிமன்ற அனுமதியுடன் சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு, வரும் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள், காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. சேவல் சண்டையில் பங்கேற்கும் சேவல்களின் காலில் கத்தி கட்ட கூடாது.
மதுபானம் ஊற்றுவதும், ஜாதி, மதம் பெயரை வைத்து அழைக்க கூடது என, சமீபத்தில் உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.
கால்நடை மருத்துவர்கள், சேவல்களை முறையாக பரிசோதனை செய்தும், போலீஸ் பாதுகாப்பு அளித்து கண்காணிக்கவும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
களம் காண உள்ள சேவல்களை, கடந்த 20 நாட்களாக, இளைஞர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
இப்போட்டியில் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலில் இருந்தும் சேவல்கள் பங்கேற்க உள்ளன.
இதையடுத்து, தங்கானுார் கிராமத்தில், 1,000 சேவல்கள் ஒரே நேரத்தில் களம் காணும் வகையில் இடம் தயார்படுத்தப்பட்டு உள்ளது.
போட்டியில் வெற்றி பெறும் சேவல்களுக்கு தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் பல்வேறு பரிசுகள் அளிக்கப்பட உள்ளன.